ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

சிதம்பரம் அருகே முதலை கடித்து விவசாயி காயம்!

சிதம்பரம் அருகே உள்ள தெற்கு சாலியாந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் (60). விவசாயியான இவர் சனிக்கிழமை காலை கிராமத்தில் உள்ள குளத்தில் மாடு குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். அப்போது

News image
Updated On :5 அக்டோபர் 2013, 9:22 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே கிராம குளத்தில் மாடு குளிப்பாட்டிக் கொண்டிருந்த போது முதலை கடித்து விவசாயி ஒருவர் காயமுற்று மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிதம்பரம் அருகே உள்ள தெற்கு சாலியாந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் (60). விவசாயியான இவர் சனிக்கிழமை காலை கிராமத்தில் உள்ள குளத்தில் மாடு குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். அப்போது குளத்திலிருந்து முதலை ஒன்று அவரது வலது கையை கடித்து கவ்வியது. சந்திரசேகரனின் அலறல் சத்தம் கேட்டு அருகாமையிலிருந்தவர்கள் முதலை வாயிலிருந்து கையை வெளியே எடுத்து உடனடியாக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். பின்னர் வலது கையில் பலத்த காயமுற்ற அவர் மேல் சிகிச்சைக்காக அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.