கீழணையிலிருந்து வடவாற்றில் 2 ஆயிரம் கனஅடி நீரை திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி காட்டுமன்னார்கோயில் அருகே திருச்சி-சிதம்பரம் நெடுஞ்சாலையில் விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கீழணையிலிருந்து போதிய அளவு நீர் திறந்துவிடப்பட்டததால், நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நீரின்றி பயிர்கள் காய்ந்து வருவதால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால் டீசல் என்ஜின் மூலம் நீண்ட தூரத்திலிருந்து நீரை வயலுக்கு கூடுதல் செலவு செய்து கொண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கீழணையிலிருந்து வடவாறு பாசனத்திற்கு விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீரை திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தி காட்டுமன்னார்கோயில் அருகே பெரியபுங்கனேரி, சிறியபுங்கனேரி ஆகிய கிராம விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்வகுளம் எனுமிடத்தில் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காட்டுமன்னார்கோயில் போலீஸார் அங்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து விவசாயிகள் மறியலை கைவிட்டனர். இதனால் சுமார் 30 நிமிடங்கள் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜாக் எட்வர்ட்ஸுக்குப் பதிலாக சன்ரைசர்ஸ் அணியில் மாற்று வீரர் சேர்ப்பு!

கல்விக் கடன் ரத்து; செவிலியர்கள் பணி நிரந்தரம்! - அதிமுக வாக்குறுதி

போர் நிறுத்தம் எதிரொலி: எழுச்சியில் இந்திய பங்குச் சந்தை!
ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 2 இந்திய எல்பிஜி கப்பல்கள்!
வீடியோக்கள்

இடதுசாரி அரசியலைப் பாதுகாக்கவே இந்த 8 தொகுதிகள்! Thirumavalavan Press meet | VCK
தினமணி வீடியோ செய்தி...

என்ன செய்தார் பெரியார்? - Seeman சர்ச்சைப் பேச்சு! | TN election 2026 | NTK
தினமணி வீடியோ செய்தி...

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...

