பாலிதீன் அரவை ஆலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

கரூர் அருகே பாலிதீன் அரவை ஆலையை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிதது அக்.22-ல் பு. தோட்டக்குறிச்சி பேரூராட்சி அலுவலம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தளவாபாளையத்தில் அண்மையில் நடந்த
Updated on
1 min read

கரூர் அருகே பாலிதீன் அரவை ஆலையை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிதது அக்.22-ல் பு. தோட்டக்குறிச்சி பேரூராட்சி அலுவலம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தளவாபாளையத்தில் அண்மையில் நடந்த விவசாய தொழிலாளர் சங்க கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் கூட்டத்தில் தளவாய்பாளையம் அரிசி ஆலை முன்பு உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சமுதாயக் கூடம் அமைக்க ஏதுவாக உள்ள இடத்திóல் குப்பைக்கிடங்கு  அமைக்கப்பட்டுள்ளதால் சுகாதாரக்கேடு உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனே குப்பைக்கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தலைவர் ப.மாறன், செயலாளர் ஆர். பிரபு, கே.மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் புதிய கிளை தலைவராக ப. மாறன், துணைத்தலைவராக எஸ். ஜீவா, செயலாராக ஆர். பிரபு உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com