போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தூத்துக்குடியில் அமெரிக்க தனியார் கப்பல் சிறைபிடிப்பு : 3 வழக்குகள் பதிவு

தூத்துக்குடி அருகே அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பலை கடலோரக் காவல் படையினர் சனிக்கிழமை பிடித்தனர். அந்த கப்பல் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :14 அக்டோபர் 2013, 5:44 am

இன்பராஜ்

தூத்துக்குடி அருகே அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பலை கடலோரக் காவல் படையினர் சனிக்கிழமை பிடித்தனர். அந்த கப்பல் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி கடலோரப் பகுதியில் பிடிபட்ட அந்த கப்பலில் 35 துப்பாக்கிகள், 25 வீரர்கள், 11 மாலுமிகள் இருந்தனர். அந்த கப்பல் அப்பகுதியில் வந்தது மற்றும் பல்வேறு தகவல்களை கடலோரக் காவல் படை,  துத்துக்குடி காவல்துறையினர், க்யூ பிரிவு போலீஸார், உளவுத் துறை போலீஸார் விசாரணை  செய்து வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில், அந்த கப்பல் நிறுவனம் மீது மன்னார் வளைகுட பகுதியில் அத்துமீறி நுழைந்ததாகவும், ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும், தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர்களிடம் 1500 லிட்டர் டீசலை திருட்டுத் தனமாகப் பெற்றுள்ளதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கப்பலில் உள்ளவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.