கடலூர் நகர அ.தி.மு.க. சார்பில் அதிமுக 42-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெருவில் வியாழக்கிழமை நடைபெற்றது. நகரச் செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான குமரன் தலைமை வகித்தார்.கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மகளிரணி துணைச் செயலாளரும், தமிழ்நாடு சமூக நல வாரியத் தலைவருமான சி.ஆர். சரஸ்வதி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன், கடலூர் நகரசபை தலைவர் சி.கே. சுப்பிரமணியன், துணை தலைவர் சேவல் குமார், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் மல்லிகா வைத்திலிங்கம், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் கே.ஆர். பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.