அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் உலக வங்கியின் கடன் வாங்கி அரசு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர்ந்தால் இந்தியாவும் திவாலாகிவிடும். இந்தியாவில் இன்னும் 50 ஆண்டுகளுக்கு தேவையான பெட்ரோஸ், கேஸ் வளங்கள் உள்ளன. தனியார் வசம் கொடுக்காமல் ஒ.என்.ஜி.சி நிறுவனம் மூலம் பெட்ரோஸ், கேஸ் எடுக்க வேண்டும். சிமெண்ட் ஆயத்தவிலை ரூ.165-தான். ஆனால் தனியார் நிறுவனங்கள் சிண்டிகேட் அமைத்து ஒரு மூட்டை ரூ330-க்கு விற்கின்றன. தனியார்மயம், தாராளமயம் கொள்கைகளினால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. அரசே நியாய விலைக்கடைகள் மூலம் சிமெண்ட், மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை விற்பனை செய்ய வேண்டும். தமிழகத்தில் ஆட்சியாளர்கள் இலவசம், மானியத்தை வழங்கி அரசை நடத்துகிறார்கள். ஆனால் மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி சிந்திக்கவில்லை என கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.