தமிழகம் எங்கும் தலித் மக்களுக்கு எதிராக அணி திரட்டிப்படுகிறது. இது ஜனநாயகத்திற்கும், அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும். அனைத்து சமுதாய பேரியக்கம் என்ற பெயரில் தலித் சமுதாயம் புறக்கணிக்கப்படுகிறது. இதனை தமிழகஅரசு வேடிக்கை பார்க்காமல், கூர்ந்து கண்காணித்து அச்சக்திகள் அணி திரளாமல் தடுத்திட வேண்டும். தமிழகத்தில் திட்டமிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பங்கள் வெட்டி சாய்க்கப்படுகின்றன. பெட்ரோல் குண்டு வீசி பேனர்கள் கொளுத்தப்படுகின்றன. சாதிய வாக்கு வங்கியை திரட்ட இச்செயலில் ஈடுபட்டுள்ளனர். சில நாட்கள் முன்பு சிதம்பரம் அருகே கருப்பூரில் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்து கட்சி கொடிக்கம்பங்களும் வெட்டி சாய்த்து கொடிகள் கொளுத்தப்பட்டுள்ளன. இதில் குற்றவாளிகள் யார் என்று தெரிந்தும், காவல்துறை விடுதலைச் சிறுத்தைகள் முகாம் பொறுப்பாளர் சிற்றரசுவை கைது செய்துள்ளது. இந்த போக்கை வண்மையாக கண்டிக்கிறோம். உண்மையான குற்றவாளிகளை போலீஸார் கைது செய்ய வேண்டும்.