அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தீபாவளியையொட்டி நவம்பர் 1-ம் தேதி நியாய விலைக் கடைகள் செயல்படும்

வேலைக்குச் செல்லும் பொதுமக்களின் நலன் கருதி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஷன் கடைகள் செயல்படும் என்று அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. அதற்காக வெள்ளிக்கிழமைகளில் ரேஷன் கடைகளுக்கு

News image
Updated On :21 அக்டோபர் 2013, 1:28 pm

தங்கராஜா

தீபாவளி பண்டிகை வருவதை அடுத்து நவம்பர் 1-ம் தேதி (வெள்ளிக்கிழமை) சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

 வேலைக்குச் செல்லும் பொதுமக்களின் நலன் கருதி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஷன் கடைகள் செயல்படும் என்று அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. அதற்காக வெள்ளிக்கிழமைகளில் ரேஷன் கடைகளுக்கு வார விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

 இந்த நிலையில் தீபாவளி பண்டிகை நவம்பர் 2-ம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள், குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை முன்கூட்டியே வாங்கக் கூடும் என்பதால் நவம்பர் 1-ம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

 அதற்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) விடுமுறை அளிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை நவம்பர் 1-ம் தேதியும் பெற்றுக் கொள்ளலாம் என்று ஆட்சியர் க.மகரபூஷணம் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.