இதேபோல, கப்பலுக்கு டீசல் விற்பனை செய்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டு ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதான 35 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் சிலரிடம் மீண்டும் விசாரணை நடத்த கியூ பிரிவு போலீஸார் முடிவு செய்துள்ளனர்.இதற்கிடையே, தூத்துக்குடி குற்றவியல் நீதித் துறை நடுவர் மன்றம் எண் 2 -ல் நடைபெற்று வந்த இந்த வழக்கு எண் 1-க்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், கப்பலின் பாதுகாப்பு அதிகாரியான இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பால் டேவிட் டென்ப் டவர் (50), மாலுமிகளான மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த லலித்குமர் குராங் (40), உத்தர்பிரதேசத்தைச் சேர்ந்த ராதேஸ்வர் திவேதி (39) ஆகிய மூவரையும் 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கியூ பிரிவு போலீஸார் குற்றவியல் நீதித் துறை நடுவர் (எண்.1) மன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தனர்.