தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

நகராட்சியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட திமுக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள்!

ஆணையாளர் பணியிடம் உள்ளிட்ட காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தை திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் மூவேந்தர்

News image
Updated On :25 அக்டோபர் 2013, 10:16 am

ஜி.சுந்தரராஜன்

ஆணையாளர் பணியிடம் உள்ளிட்ட காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தை திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் மூவேந்தர் முன்னேற்றக்கழக உறுப்பினர்கள் முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை நகரமன்றக் கூட்டம் முடிந்தவுடன் சுகாதார ஆய்வாளர் மோகனசுந்தரம் நகரமன்ற உறுப்பினர்களையும், துப்புரவுத் தொழிலாளர்களையும் தரக்குறைவாக பேசுவதை கண்டித்தும், ஆணையாளர் உள்ளிட்ட காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும் திமுக நகரமன்ற உறுப்பினர்களின் கொறடா த.ஜேம்ஸ்விஜயராகவன் தலைமையில் உறுப்பினர்கள் வெங்கடேசன், அப்புசந்திரசேகரன், ஏ.ஆர்.சி.மணி, தமிழக வாழ்வுரிமை கட்சி உறுப்பினர் ஆ.ரமேஷ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் பெரு.திருவரசு, மூவேந்தர் முன்னேற்றக்கழக உறுப்பினர் ஜி.செல்வராஜ் உள்ளிட்டோர் நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்களிடம் நகரமன்றத் தலைவர் எஸ்.நிர்மலாசுந்தர் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்ததை அடுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர். நகராட்சியில் ரூ.74 கோடி செலவில் புதிய பாதாள சாக்கடை திட்டம், ரூ இரண்டரை கோடி செலவில் நகராட்சி அலுவலகம் கட்டும் பணி உள்ளிட்ட பணிகள் செயல்படுத்த உள்ளது. இவ்வேளையில் கடந்த 5 ஆண்டுகளாக ஆணையாளர் பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆணையாளர் உள்ளிட்ட காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும் நகரமன்ற உறுப்பினர்களையும், துப்புரவுத் தொழிலாளர்களையும் தரக்குறைவாக பேசும் சுகாதார ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜேம்ஸ்விஜயராகவன் நகரமன்றத் தலைவரிடம் வலியுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.