அரசியலில் எப்படி தூய்மையாக, ஏழ்மையாக, ஒழுக்கமாக இருக்க வேண்டும் என வாழ்ந்த முன்னாள் எம்பி ஆர்.கனகசபை பிள்ளையின் வாழ்க்கை இன்றைய அரசியல்வாதிகளுக்கு முக்கியமானதாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் தெரிவித்தார்.
சிதம்பரம் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.கனகசபை பிள்ளை நூற்றாண்டு விழா தனலட்சுமி அம்மாள் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.நடராஜன் தலைமை வகித்தார். டாக்டர் ஆர்.முத்துக்குமரன் வரவேற்றார். விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைர் பி.எஸ்.ஞானதேசிகன் பங்கேற்று பேசியதாவது:
ஆர்.கனகசபை 10 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 5 ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். அன்றைக்கு பொருளாதார கட்டுப்பாடு என்பது அரசர்கள் கையிலும், முதலாளிகள் கையிலும் இருந்தது. ஏழை மக்களுக்கு இந்த நிதியை கொண்டு செல்வது என கூட்டுறவு துறையை உருவாக்கி தென்னாற்காடு மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவராக இருந்தார். கூட்டுறவுத்துறையில் பல்வேறு பதவிகளை வகித்து அகில இந்திய கூட்டுறவு சம்மேளன தலைவராகவும் பணியாற்றியுள்ளார். பல்வேறு பதவிகள் வகித்தாலும், அவர் வகித்த பதவிக்கு பெருமை சேர்த்தவர் ஆர்.கே. மிகப்பெரிய தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் தலைவர் இளையபெருமாளை அரசியக்கு கொண்டு வந்தவர். நேரு, அன்னை இந்திராகாந்தி, பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்டோருடன் நட்பு பாராட்டப்பட்டவர். மேலும் ஆர்.கனகசபை காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய தூனாக இருந்துள்ளார் என பி.எஸ்.ஞானதேசிகன் தெரிவித்தார்.
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ஜனார்த்தனம், உயர்நீதிமன்ற நீதிபதி விமலா வேல்முருகன், மத்தியஅரசின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் வி.எஸ்.அருணாசலம், முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன், சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், நகரமன்றத் தலைவர் நிர்மலாசுந்தர், முன்னாள் துணைவேந்தர் ஆளுடையப்பிள்ளை, ஏ.ஞானம், அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் என்.பஞ்சநதம், கார்காத்தார் சங்க மாநிலத் தலைவர் கேப்டன் ஆர்.எஸ்.ஜெகதீசன், ஆனந்தநடராஜ தீட்சிதர், முன்னாள் எம்எல்சி சி.ஆர்.லட்சுமிகாந்தன், முன்னாள் தமிழ்நாடு பப்ளிக் சர்விஸ் கமிஷன் தலைவர் ஜி.செல்வகணபதி, முன்னாள் தமிழ்த்துறை தலைவர் பிஎல்.முத்துவீரப்பன், உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரையாற்றினர்.
விழாவில் முன்னாள் எம்பி டாக்டர் ப.வள்ளல்பெருமான், முன்னாள் நகரமன்றத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், கடலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஏ.நெடுஞ்செழியன், ஆர்.சச்சிதானந்தம், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன், டாக்டர் என்.சிதம்பரம் மற்றும் சென்னை தமிழ்நாடு கூட்டுறவு வங்கி (TNSC) பணியாளர்கள், நகர பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் ஆர்.கே.கணபதி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக ஆட்சி மீண்டும் மலர வேண்டும்! துணை நிற்கிறோம்!! - கமல்

அமெரிக்கா - ஈரான் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயார் - பாகிஸ்தான்

கர படத்தின் கதாபாத்திரங்கள்!

நூறு சாமி படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்!
வீடியோக்கள்

அதிமுகவின் ஃபிரிட்ஜ் அறிவிப்பு திமுகவுக்கு நெருக்கடியா?: கனிமொழி சோமு மறுப்பு!
தினமணி வீடியோ செய்தி...
அதிமுகவை முந்துகிறதா தவெக ? | UN Kannan interview | DMK | ADMK | TVK | BJP |TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

விலையில்லா Fridge, 3 Gas Cylinders! ADMKவின் கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு! | EPS
தினமணி வீடியோ செய்தி...

இடதுசாரி அரசியலைப் பாதுகாக்கவே இந்த 8 தொகுதிகள்! Thirumavalavan Press meet | VCK
தினமணி வீடியோ செய்தி...

