மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தருமபுரி இளவரசன் மரணம் தற்கொலை அல்ல: உயர் நீதிமன்றத்தில் தந்தை பதில் மனு தாக்கல்

கடந்த மாதம் உயர் நீதிமன்றத்தில் இளவரசனின் தந்தை இளங்கோ தாக்கல் செய்த மனுவில், எனது மகன் இளவரசனின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் உள்ளன. பல்வேறு கோணங்களில் விசாரிக்க வேண்டிய

Updated On :2 செப்டம்பர் 2013, 3:25 pm

இளவரசனின் மரணம் தற்கொலை அல்ல என்று அவரது தந்தை இளங்கோ சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த மாதம் உயர் நீதிமன்றத்தில் இளவரசனின் தந்தை இளங்கோ தாக்கல் செய்த மனுவில், எனது மகன் இளவரசனின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் உள்ளன. பல்வேறு கோணங்களில் விசாரிக்க வேண்டிய போலீஸார், இதனை தற்கொலை எனக் கூறி வழக்கை முடிக்க நினைக்கின்றனர். எனவே, இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கே. சசிதரன், இளவரசன் மரணம் தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.இந்நிலையில் இளவரசனின் தந்தை இளங்கோ, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:

எனது மகனுக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. எனது மகன் எழுதியதாகக் கூறப்படும் கடிதம் குறித்தும் போலீஸார் உரிய விசாரணை நடத்தவில்லை.தற்கொலை செய்து கொள்ளப்போவதாக இளவரசன் தன்னிடம் போனில் பேசியதாக திவ்யா கூறியதாக செய்திகள் வந்துள்ளன. இது குறித்து திவ்யா வேறு யாரிடமாவது கூறினாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படவில்லை. இதுபோல இந்த வழக்கில் விசாரிக்க வேண்டிய பல்வேறு மர்மங்கள் இருக்கும்போது, இளவரசன் தற்கொலை செய்து கொண்டாக தருமபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது விசாரணையை திசைதிருப்பும் முயற்சியாகும். எனவே, இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என கோரியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.