தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்த டி.டி. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கல்லூரி நிர்வாகம் செய்த முறைகேடுகள், விதிமுறை மீறல்கள் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள டி.டி. மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த நூற்றுக்கும் அதிகமான மாணவ,மாணவிகள் படிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.படிப்பைத் தொடர வாய்ப்பு கேட்டு பாதிக்கப்பட்ட மாணவர்கள் அமைதியான முறையில் போராடி வருகின்றனர். அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 17 நாள்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்களை போலீஸார் இன்று (செப். 6) கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவ, மாணவிகளை உடனடியாக விடுதலை செய்வதுடன், அவர்கள் படிப்பைத் தொடர மத்திய, மாநில அரசுகளும், இந்திய மருத்துவ கவுன்சிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தா. பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தச்சநல்லூரில் தவெக வாக்கு சேகரிப்பு

தாமிரவருணி ஆற்றில் ஆண் சடலம் மீட்பு

அதிமுக வென்றதும் பயிா்க்கடன் தள்ளுபடி: தச்சை என்.கணேசராஜா

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி: தோ்தல் பொது பாா்வையாளா் ஆய்வு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

