மொரப்பூர் வனச்சரகம், எட்டிப்பட்டி மற்றும் கொளகம்பட்டி காப்புக்காடுகளில் ஏரளமான புள்ளி மான்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மான்கள் குடிநீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வருவது வழக்கம்.இந்த நிலையில், எட்டிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வனப்பகுதியில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் வெளியே வந்த புள்ளிமானை நாய்கள் கடித்துள்ளது. இதில் காயமடைந்த மான் சாலையோரம் இருந்ததாம். காயமடைந்த பெண் புள்ளி மானின் வயது 3 ஆக இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர். மொரப்பூர் வனச்சரகர் என்.ஆறுமுகம், வனவர் சி.வேடியப்பன் தலைமையிலான வனத்துறையினர் புள்ளிமானை மீட்டு, அரசு கால்நடை மருத்துவரிடம் சிகிச்சை அளித்து மீண்டும் வனப்பகுதியில் விட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேஜரிவாலின் 'பி-டீம்' சிஜேபி - சுவாதி மலிவால் குற்றச்சாட்டு!

சிஜேபி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
ஈரானில் அரசுக்கு எதிராகப் போராடிய 2 பேருக்கு பொதுவெளியில் தூக்கு தண்டனை!

எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து: உயர் நீதிமன்றம்
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்


