சேலம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 8.75 லட்சம் பணம் கையாடல் தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் 4 பேர் மீது இன்று வழக்குப் பதிவு செய்தனர்.
சேலம் மாவட்டம் டேனீஸ்பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையின் விற்பனைக் கணக்கில் இருந்து ரூ. 8.75 லட்சம் பணம் குறைந்தது அண்மையில் கண்டறியப்பட்டது. டாஸ்மாக் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கடை ஊழியர்கள் அப்பணத்தை கையாடல் செய்தது தெரிய வந்தது.இது குறித்து சேலம் மண்டல டாஸ்மாக் நிர்வாக மேலாளர் சிலம்பரசன், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸார், கடையின் மேற்பார்வையாளர் ஆர்.சி.செட்டிபட்டியைச் சேர்ந்த பிரகாசம், விற்பனையாளர் சண்முகசுந்தரம், பார் உதவியாளர்கள் முனுசாமி, முத்துசாமி ஆகிய 4 பேர் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் குற்றப்பிரிவு போலீஸார், 4 பேரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொங்கு வேளாளா் சமுதாய வளா்ச்சிக்கு வித்திட்டது திமுக: எஸ்.சூரியமூா்த்தி

மத்திய அரசின் மக்களவை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்: தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளா் கே.ஜி.அருண்ராஜ்

பாலக்கோட்டில் வீதிவீதியாக நடந்துசென்று வாக்கு சேகரித்த முதல்வா் மு.க.ஸ்டாலின்
தோ்தல் பிரசாரம்: ஏப்.19 இல் முதல்வா் ஒசூா் வருகை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

