கம்பைநல்லூர் அருகே விஷம் பெண் ருக்கு (65) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அரூர் வட்டம், போளையம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பூவால். இவரது மனைவி ருக்கு (65). இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டாராம். பல்வேறு இடங்களில் மருத்துவச் சிகிச்சைப் பார்த்தும் உடல் நிலை சரியாகவில்லையாம்.இந்த நிலையில், தனிமையில் இருந்த அவர் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தினை குடித்துள்ளார். தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் மீட்டு மொரப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக 108 மூலம் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
இச் சம்பவம் குறித்து அவரது மகன் மாயக்கண்ணன் (36) அளித்த புகாரின் பேரில் கம்பைநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெட்ரோல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரி: லிட்டருக்கு ரூ. 1.5-ஆக குறைப்பு!
வி.ஐ.பி.க்கள் பாதுகாப்பு எப்படி?
கல்விக்கொடி!

ஜன நாயகனின் உண்மையைப் பேச தைரியம் இல்லை: இயக்குநர் வினோத்
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


