ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம் நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 3-வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!தொடரும் அமளி! நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது!காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா!தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை! அமைச்சர் நிர்மல்குமார்ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்பு
/

வெடிப்பொருள்கள் கடத்தல்: இளைஞர் கைது

அரூர் ஒன்றியம் அச்சல்வாடி, ஒடல்பட்டி பகுதியில் ஒரு கும்பல் தடை செய்யப்பட்ட வெடிப்பொருள்களை கேரளாவுக்கு தொடர்ந்து கடத்தி வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனையெடுத்து

Updated On :3 ஜனவரி 2024, 7:06 pm IST

அரூர் அருகே வெடிப்பொருள்கள் கடத்தியதாக இளைஞர் வெங்கடாசலம் (27) என்பவரை போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.

அரூர் ஒன்றியம் அச்சல்வாடி, ஒடல்பட்டி பகுதியில் ஒரு கும்பல் தடை செய்யப்பட்ட வெடிப்பொருள்களை கேரளாவுக்கு தொடர்ந்து கடத்தி வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனையெடுத்து அரூர் காவல் ஆய்வாளர் சென்னகேசவன் தலைமையிலான போலீஸார், அரூர்-அச்சல்வாடி சாலையில் வாகண தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒடசல்பட்டி பேருந்து நிறுத்தம் எதிரே சந்தேகமான முறையில் இருந்த இளைஞர் ஒருவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் அச்சல்வாடி ஊராட்சி ஒடசல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாண்டு மகன் வெங்கடாசலம் (27) என்பது தெரியவந்தது. இவர் தடை செய்யப்பட்ட வெடிப்பொருள்களை கேரளாவுக்கு கடத்தும் கும்பலுடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது.அவரிடமிருந்து, 5 கிலோ அம்மோனியம் நெட்ரேட் உப்பு, 5 ஜலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட வெடிப்பொருளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.இச் சம்பவம் குறித்து அரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.