அரூர் அருகே வெடிப்பொருள்கள் கடத்தியதாக இளைஞர் வெங்கடாசலம் (27) என்பவரை போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.
அரூர் ஒன்றியம் அச்சல்வாடி, ஒடல்பட்டி பகுதியில் ஒரு கும்பல் தடை செய்யப்பட்ட வெடிப்பொருள்களை கேரளாவுக்கு தொடர்ந்து கடத்தி வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனையெடுத்து அரூர் காவல் ஆய்வாளர் சென்னகேசவன் தலைமையிலான போலீஸார், அரூர்-அச்சல்வாடி சாலையில் வாகண தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒடசல்பட்டி பேருந்து நிறுத்தம் எதிரே சந்தேகமான முறையில் இருந்த இளைஞர் ஒருவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் அச்சல்வாடி ஊராட்சி ஒடசல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாண்டு மகன் வெங்கடாசலம் (27) என்பது தெரியவந்தது. இவர் தடை செய்யப்பட்ட வெடிப்பொருள்களை கேரளாவுக்கு கடத்தும் கும்பலுடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது.அவரிடமிருந்து, 5 கிலோ அம்மோனியம் நெட்ரேட் உப்பு, 5 ஜலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட வெடிப்பொருளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.இச் சம்பவம் குறித்து அரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெட்ரோல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரி: லிட்டருக்கு ரூ. 1.5-ஆக குறைப்பு!
வி.ஐ.பி.க்கள் பாதுகாப்பு எப்படி?
கல்விக்கொடி!

ஜன நாயகனின் உண்மையைப் பேச தைரியம் இல்லை: இயக்குநர் வினோத்
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


