அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகரில் ஐ.டி.ஐ மாணவர்களுக்குள் மோதல்: 3 பேர் கைது

விருதுநகரில் தொழிற்பயிற்சி பள்ளி மாணவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மாணவர் தாக்கப்பட்டது தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :19 செப்டம்பர் 2013, 11:16 am

விருதுநகரில் தொழிற்பயிற்சி பள்ளி மாணவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மாணவர் தாக்கப்பட்டது தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் அருகே எம்.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் தங்கமலை(18). இவர் விருதுநகர் அரசு தொழிற்பயிற்சி பள்ளியில் இயந்திரவியல் இறுதியாண்டு படித்து வருகின்றார். திருத்தங்கல் அருகே பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர்கள் விஜயபாண்டி(18), க.காளிராஜன்(18), ம.காளிராஜன்(17) ஆகியோரும் இதே தொழிற்பயிற்சி பள்ளியில் வயர்மேன் பிரிவில் இறுதியாண்டு படித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் விருதுநகருக்கு வந்து ஐ.டி.ஐக்கு பஸ்ஸில் செல்லும் போது பிரச்னையில் ஈடுபட்டுள்ளனர்.

அதையடுத்து புதன்கிழமை மாலையில் பள்ளி முடிந்து சூலக்கரை பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் போது தகராறு செய்துள்ளனர். இதில், மூன்று பேரும் சேர்ந்து தங்கமலையை தாக்கி முதுகில் பிளேடால் கீறி காயப்படுத்தியுள்ளனர். எனவே இது தொடர்பாக தங்கமலை சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் மூன்று பேர் மீதும் வழக்கு பதிந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.