விருதுநகரில் தொழிற்பயிற்சி பள்ளி மாணவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மாணவர் தாக்கப்பட்டது தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் அருகே எம்.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் தங்கமலை(18). இவர் விருதுநகர் அரசு தொழிற்பயிற்சி பள்ளியில் இயந்திரவியல் இறுதியாண்டு படித்து வருகின்றார். திருத்தங்கல் அருகே பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர்கள் விஜயபாண்டி(18), க.காளிராஜன்(18), ம.காளிராஜன்(17) ஆகியோரும் இதே தொழிற்பயிற்சி பள்ளியில் வயர்மேன் பிரிவில் இறுதியாண்டு படித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் விருதுநகருக்கு வந்து ஐ.டி.ஐக்கு பஸ்ஸில் செல்லும் போது பிரச்னையில் ஈடுபட்டுள்ளனர்.
அதையடுத்து புதன்கிழமை மாலையில் பள்ளி முடிந்து சூலக்கரை பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் போது தகராறு செய்துள்ளனர். இதில், மூன்று பேரும் சேர்ந்து தங்கமலையை தாக்கி முதுகில் பிளேடால் கீறி காயப்படுத்தியுள்ளனர். எனவே இது தொடர்பாக தங்கமலை சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் மூன்று பேர் மீதும் வழக்கு பதிந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இந்தியாவின் முதல் விண்வெளிப் பயணம்

சமூக ஊடகம் மூலம் சிறுவனுடன் நட்பு: தப்பியோடிய சிறுமி மீட்பு

பிடிவாதம் தளர வேண்டும்!

எஸ்யூவி வாகனம் மோதி டாக்ஸி ஓட்டுநா் படுகாயம்! மேற்கு தில்லியில் சம்பவம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

