பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த ஆசிரியர் சாவு

அரூர் வட்டம், எல்லப்புடையாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோவிந்தசாமி மகன் பழனி (40). இவர் வேப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார்.இவர், இம் மாதம் 12-ம் தேதி இரவு 7

Updated On :22 செப்டம்பர் 2013, 6:02 pm IST

அரூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த ஆசிரியர் கோ.பழனி (40) )சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

அரூர் வட்டம், எல்லப்புடையாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோவிந்தசாமி மகன் பழனி (40). இவர் வேப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார்.இவர், இம் மாதம் 12-ம் தேதி இரவு 7 மணியளவில், அரூர்-எல்லப்புடையாம்பட்டி சாலையில் மோட்டார் சைக்கிளில் தமது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது  எல்லப்புடையாம்பட்டி வராட்டாறு மேடு அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற ஆசிரியர் பழனியிடம்  அந்த வழியில் நடந்து சென்ற ஒருவர் வண்டியை நிறுத்துமாறு கையை காட்டினாராம்.இதனால் ஆசிரியர் திடீரென பீரேக் போட்டதில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்தாராம். இதில் அவருக்கு தலை மற்றும் மூக்குதண்டுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். ஆசிரியர் கோ. பழனிக்கு மனைவி வனிதா, 2 மகள்கள், மகன் உள்ளனர்.இச் சம்பவம் குறித்து அவரது தம்பி பெருமாள் (38) அளித்த புகாரின் பேரில் அரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.