மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

நாளை மறுநாள் திருச்சி வருகிறார் நரேந்திர மோடி: 1.5 லட்சம் பேர் முன் பதிவு

திருச்சியில் நடைபெறும் பாஜக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி வியாழக்கிழமை (செப். 26) திருச்சி வருகிறார்

News image
Updated On :24 செப்டம்பர் 2013, 3:12 pm

திருச்சியில் நடைபெறும் பாஜக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி வியாழக்கிழமை (செப். 26) திருச்சி வருகிறார்.

2014-ல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான பாஜக பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி செப்டம்பர் 13-ஆம் தேதி அறிவிக்கப்பட்டார்.அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்.அதன் ஒரு பகுதியாக வரும் வியாழக்கிழமை (செப். 26) திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் நடைபெறும் பாஜக மாநில இளைஞரணி மாநாட்டில் மோடி பங்கேற்கிறார்.

இளந்தாமரை மாநாடு எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மாநாட்டில் பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங், தேசிய இணை அமைப்புப் பொதுச்செயலாளர் வி. சதீஷ், பொதுச்செயலாளர் முரளிதர் ராவ், தேசிய இளைஞரணித் தலைவர் அனுராக்சிங் தாகூர், கர்நாடகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த ஆர். ராமகிருஷ்ணன், பாஜக நாடாளுமன்ற கட்சி இணைச் செயலாளர் வி. சண்முகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல. கணேசன், தேசியச் செயலாளர் டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன், மாநிலப் பொதுச்செயலாளர் எஸ். மோகன்ராஜூலு, மாநிலச் செயலாளர்கள் வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், சுப்பிரமணியன், மாநில இளைஞரணித் தலைவர் பொன். வி. பாலகணபதி ஆகியோர் மாநாட்டுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

மாநாட்டில் பங்கேற்பவர்களை உறுதி செய்ய முன்பதிவு செய்வதற்காக www.modiintamilnadu.com என்ற இணையதளம் செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த இணையதளம் மூலம் 50 ஆயிரம் பேர், விண்ணப்பப் படிவங்கள் மூலம் நேரடியாக 1 லட்சம் பேர் என மொத்தம் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதாக மாநாட்டுப் பொறுப்பாளர்களில் ஒருவரும், மாநிலச் செயலாளருமான வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.