தீர்ப்பில் புதிய கட்டணம் நிர்ணயிப்பதற்காக கட்டண குழுவிற்கு தெனிவான வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருந்தது. ஆசிரியர் மற்றும் அலுவலர் ஊதியம், வருங்கால வைப்பு நிதி, காப்பீட்டு திட்டத்திற்கான செலவு மற்றும் பணிக்கொடைத் தொகை ஆகியவற்றிற்கான செலவு, பள்ளி வளர்ச்சிப் பணிக்கான செலவு, உள்கட்டமைப்பிற்கான செலவு போன்ற பல்வேறு செலவுகளின் அடிப்படையில் பள்ளிக் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என முன்பே நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால் இந்த மூன்று பள்ளிகளைச் பொறுத்தவரையில் ஊதியத்திற்கான செலவு, பள்ளி நிர்வாகச் செலவு, இதர சில்லரைச் செலவுகள் உள்பட அனைத்து செலவுகளும் பரிசீலிக்கப்பட்டிருக்க வேண்டும். உயர்நீதிமன்றத்தினால் குறிப்பிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. அதன் காரணமாக இப்பள்ளிகள் கடுமையான நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.