அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சேலம் மாநகராட்சி மன்றத்தில் திமுக-அதிமுக உறுப்பினர்கள் கைகலப்பு: அடிதடி ரகளையால் பரபரப்பு

சேலம் மாநகராட்சி மாமன்றத்தில் வழக்கமான கூட்டம் முற்பகல் 11 மணிக்குத் தொடங்கியது. மேயர் கலந்து கொண்ட இந்தக் கூட்டம், ஆணையர் அசோகன் முன்னிலையில் தொடங்கியது

News image
Updated On :26 செப்டம்பர் 2013, 6:55 am

தங்கராஜா

சேலம் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

சேலம் மாநகராட்சி மாமன்றத்தில் வழக்கமான கூட்டம் முற்பகல் 11 மணிக்குத் தொடங்கியது. மேயர் கலந்து கொண்ட இந்தக் கூட்டம், ஆணையர் அசோகன் முன்னிலையில் தொடங்கியது

அப்போது, அவசரத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. திமுக கவுன்சிலர் புவனேஸ்வரி முரளி பேசும்போது, நகரில் ஓடைகள் 2 மாதம் முன்பே தூர் வாரப்பட வேண்டும் என்று கூறினோம். இப்போது மழை பெய்து, ஓடைகள் அடைக்கப்பட்டு, ஊருக்குள் சாக்கடைத் தண்ணீர் புகுந்து கொண்டு விட்டது என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேயர் பதில் அளித்தார். அப்போது, இந்த ஓடைகள் ஆக்கிரமிப்பு திமுக காலத்தில் செய்யப்பட்டது என்றும் அதனால் இப்போது அவற்றை அப்புறப்படுத்துவதில் சிக்கல் உள்ளது என்றும் கூறினார்.

இதற்கு திமுக கவுன்சிலர்கள் எழுந்து நின்று ஒரே குரலில் பேசினர். அப்போது, திமுக கவுன்சிலர் தெய்வலிங்கத்தை அதிமுக கவுன்சிலர் மாரியப்பன் தாக்கினார்.

மேலும் அதிமுகவினர் சிலர் சூழ்ந்து நின்று தாக்கத் தொடங்கினர். அதிமுக திமுக பெண் கவுன்சிலர்கள் ஒருமையில் திட்டிக் கொண்டு கைகலப்பில் ஈடுபட்டனர். இதனால் கூட்டம் பாதியில் முடிந்தது. இந்த ரகளை மற்றும் அடிதடியால் மாநகராட்சி மன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.