ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

சிதம்பரத்தில் உலக வெறிநோய் தினம்: 50 நாய்களுக்கு தடுப்பூசி

சிதம்பரத்தில் அவதார் டிரஸ்டு சார்பில் உலக வெறிநோய் தினத்தை (World Rabies Day) முன்னிட்டு 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி சனிக்கிழமை போடப்பட்டது.

News image
Updated On :28 செப்டம்பர் 2013, 10:05 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் அவதார் டிரஸ்டு சார்பில் உலக வெறிநோய் தினத்தை (World Rabies Day) முன்னிட்டு 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி சனிக்கிழமை போடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விலங்கு நல பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள அவதார் டிரஸ்ட் தலைவர் சி.எஸ்.பாலசுந்தரம் செய்திருந்தார். அரசு கால்நடை மருத்துவர்களான எம்.கணேசன், பி.பவானி ஆகியோர் தெருநாய்களுக்கு தடுப்பூசுகளை போட்டனர். டிரஸ்ட் செயலாளர் கே.சக்திவேல், துணைச் செயலாளர்கள் மண்ணை சிவா, ஏ.வெங்கடேசன், மருத்துவப் பிரிவு செயலாளர் ஜே.கண்ணன், உறுப்பினர்கள் ஆர்.ஜம்பு, டி.ராமலிங்கம், வேல்முருகன், சங்கர், மணிகண்டன், பிரசார செயலர் பொன்மயில் ஆகியோர் நாய்களை பிடித்து தடுப்பூசு போட உதவினர். சிதம்பரம் நகரில் பல்வேறு சாலைகளில் சுற்றி திரிந்து கொண்டிருந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.