இரட்டை கோபுர தாக்குதல் : நஷ்ட ஈடு வழங்க விமான நிறுவனம் முடிவு

கடந்த 2001ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருந்த இரட்டைக் கோபுரங்கள் மீது அல்கொய்தா தற்கொலைப் படை பயங்கரவாதிகள் விமானங்களை மோதி நடத்திய தாக்குதலில் பலியானவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க விமான நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

கடந்த 2001ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருந்த இரட்டைக் கோபுரங்கள் மீது அல்கொய்தா தற்கொலைப் படை பயங்கரவாதிகள் விமானங்களை மோதி நடத்திய தாக்குதலில் பலியானவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க விமான நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

இரட்டை கோபுரத்தில் இயங்கி வந்த கேண்டர் பிட்ஸ்ஜெரால்ட் என்ற நிறுவனம், இந்த தாக்குதலில் சுமார் 650 ஊழியர்களை இழந்தது. இந்த தாக்குதலுக்கு பயங்கரவாதிகளை நன்கு சோதிக்காமல் விமானத்தில் ஏற்றிய அமெரிக்கன் விமான நிறுவனத்தின் மீது வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கின் விசாரணையில் 135 மில்லியன் டாலர் தொகையை நஷ்ட ஈடாக வழங்க விமான நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com