நான் கடந்த 3 ஆண்டுகளாக கிராமப்புறங்களுக்கு சென்று சாதி, மத வேறுபாடின்றி, ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்து வருகிறேன். ஒரு சிலர் நான் பாமகவில் சேர்ந்ததை தவறாக பேசுகின்றனர். இந்த இரு சமுதாயம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற பாமக நிறுவனர் ராமதாஸின் கொள்கையோடு சேர்ந்துள்ளேன். நான் கட்சி மாறவில்லை. ஒரு சகோதரர் கூட கைகோர்த்து உள்ளேன். ஏமாற்றுகின்ற அரசியல் தலைமையை எதிர்த்து போராட அரசியலில் ஈடுபட முடிவு எடுத்து தேர்தல் களத்தில் நிற்கிறேன். சமூக துரோகிகள் மீண்டும் இந்த தொகுதியை கையில் எடுத்துவிடக்கூடாது. சமூக துரோகிகளை சமுதாயத்திலிருந்து வெளியேற்ற வேண்டிய நேரம் இது. எனவே தீமையை அடையாளம் கண்டு, மக்கள் அமைதியாக இருந்து என்னை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என கே.ஐ.மணிரத்தினம் தெரிவித்தார்.