நான் கடந்த 5 ஆண்டு காலம் என்ன சாதித்தாய் என்று கேட்டால், நான் அதை செய்தேன், இதை செய்தேன் என்று சொல்லுவதை விட ஒன்றை சொல்ல விரும்புகிறேன். அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட மக்களின் வருமான வரம்பு நாலரை லட்சம் என அரசு விதித்துள்ளது. நாலரை லட்சம் வருமான வரம்பிற்கு மேல் உள்ளவர்கள் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கிடையாது என அரசானை சொல்கிறது. எனவே நான் பிரமதரை சந்தித்து, ஆடு, மாடு மேய்க்கும், ஏழை, எளிய மக்களின் ஆண்டு வருமான வரம்பினை ரூ.12 லட்சமாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்து மனு கொடுத்தேன். மனுவை ஏற்றுக்கொண்ட பிரதமர் மன்மோகன்சிங், வருமான வரம்பை ரூ.9 லட்சமாக உயர்த்தி வழங்கினார். இதன் மூலம் வன்னியர், பிள்ளைமார், முதலியார் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில் அரசாணை பெற்று தந்தேன். அனைத்து சமுதாயத்தினரையும் நான் நேசிப்பதற்கு இதுவே சான்றாகும்.