முந்திரி, கரும்பு விவசாயிகளுக்கு கொள்முதல் செய்யப்பட்ட உடனேயே, அதன் ஆதார விலை கிடைப்பதற்கும் போராடுவோம். நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்த பட்சம் ரூ.2500 கிடைக்கவும், அதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு மத்தியஅரசு உத்திரவாதம் அளித்திடவும் போராடுவோம். சிறிய, நடுத்தர விவசாயிகளுக்கு விதை, இயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவற்றை வழங்குவதற்கு, பொருளாதார நிலையைக் கருதி நூறு சதவீத மானியம் அளித்திடவும், அத்துடன் சிறு மற்றும் குறு விவசாயிகள் பெற்ற கடன்களை அடியோடு ரத்து செய்தியடுவ்ம போராடுவோம். நலிந்து வரும் விவசாய உற்பத்தியை விடுதலைச் சிறுத்தைகள் மீட்டெடுப்போம் என அறிக்கையில் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.