நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பாஜகவுடன் அதிமுக ரகசிய கூட்டு: திருமாவளவன்

பாரதிய ஜனதா கட்சியுடன், அதிமுக ரகசிய கூட்டு வைத்துள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

News image
Updated On :7 ஏப்ரல் 2014, 8:56 am

ஜி.சுந்தரராஜன்

பாரதிய ஜனதா கட்சியுடன், அதிமுக ரகசிய கூட்டு வைத்துள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ஆயங்குடி மற்றும் லால்பேட்டை பகுதிகளில் வசிக்கும் இஸ்லாமியர்களிடம் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தார்.

ஆயங்குடியில் ஜாமிஆ மஸ்ஜித் மூத்தவல்லி, புதுப்பள்ளிவாசலம் மூத்தவல்லி, அல்-அமீன் பள்ளிவாசல் மூத்தவல்லி, மஸ்ஜித்நூர் பள்ளிவாசல் மூத்தவல்லி மற்றும் என்.ஏ.பி பள்ளிவாசல் ஜமாத் தலைவர்கள் மறறும் நிர்வாகிகள், வேட்பாளர் திருமாவளவனுக்கு வரவேற்பு அளித்தனர். லால்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ மற்றும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தனர்.

பின்னர் அங்கு வாக்கு சேகரிக்கும்போது திருமாவளவன் பேசியதாவது:

இந்த தேர்தல் ஜனநாயகத்திற்கும், மதவாதத்திற்கும் இடையே நடைபெறுகிற யுக்கம். இஸ்லாமியர்களுக்கு இருக்கிற சிறப்பு சட்டத்தை நீக்கிவிட்டு, பொதுசிவில் சட்டத்தை நடைமுறைபடுத்துவதே பாஜகவின் நோக்கமாகும். நான் வெற்றி பெற்ற வேண்டும் என்பதைவிட, அகில இந்திய அளவில் பாஜகவிடமிருந்து இந்தியாவை காப்பாற்றி, சமூகநீதியை பாதுகாக்க வேண்டும். சேதுசமுத்திர திட்டத்தை, பாஜகவும் எதிர்க்கிறது. ஜெயலலிதாவும் எதிர்க்கிறார். பாஜகவுடன், அதிமுக ரகசிய கூட்டு வைத்துள்ளது. எனவே ஜனநாயகம், சமூகநீதி பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வெற்றி பெற வேண்டும் என திருமாவளவன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.