/

வாலாஜா அருகே வாகன சோதனையின் போது 3 மூட்டை நகைகள் பறிமுதல்

வாலாஜா அடுத்த சென்னசமுத்திரம் சுங்கச்சாவடி பகுதியில் நிலையான பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையின் போது பல கோடி ரூபாய் மதிப்புள்ள 3 மூட்டை நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :10 ஏப்ரல் 2014, 2:43 am

சீனிவாசன்

வாலாஜா அடுத்த சென்னசமுத்திரம் சுங்கச்சாவடி பகுதியில் நிலையான பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையின் போது பல கோடி ரூபாய் மதிப்புள்ள 3 மூட்டை நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது சென்னையில் இருந்து ஓசூர் கொண்டு செல்லப்பட்ட போது பிடிபட்டுள்ளது. கிரீதரன் ஏ.இ.ஓ. தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சாந்த குமார், வரதராஜு உள்ளிட்டோர் பறிமுதல் செய்து ராணிப்பேட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்துள்ளனர்.

ஆவணங்கள் சரிபார்க்கும் போது போதிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல்  செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதன் மொத்த மதிப்பு 4 லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.