அமைதியாக இருக்க வேண்டும் எனக்கூறி வருகிறேன். இந்த பகுதி அமைதிக்கும், வளர்ச்சிக்கும் உத்தரவாதம் அளிக்கின்றேன். சிதம்பரம் ரயில்வே மேம்பாலத்தை நாங்கள் கொண்டு வந்தோம். எந்த கட்சிக்கு பிரதமர் வேட்பாளர் கிடையாது. தேசிய ஜனநாய கூட்டணிக்கு மட்டும்தான் பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி உள்ளார். குஜராத்தை போல் நாட்டை வளர்ச்சியடைய செய்வார். திமுக, காங்கிரஸ், அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பிரதமர் வேட்பாளர் கிடையாது. 47 ஆண்டுகளாக ஆண்டு வரும் திமுக, அதிமுக வேண்டாம் என மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். நாளுக்கு நாள் தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவு பெருகி வருகிறது. குறைந்தது 30 தொகுதிகளில் வெற்றி பெறும். திமுக முடிந்த போன கதை. 97 வயதான கருணாநிதி வசனம் பேசி வருகிறார்.
மக்களை சந்திக்காமல், வாக்கு கேட்டு ஹெலிகாப்டரில் ஜெயலலிதா பறந்து வருகிறார். ஆண்டு மூன்று முறைதான் வெளியே வருவார். சட்டப்பேரவைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலுக்கு வெளியே வருவார். பின்னர் மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வெளியே வருவார். சென்னையில் அமர்ந்து கொண்டு கானொளி மூலம் திட்டங்களை பட்டன் அழுத்தி திறந்து வைக்கிறார். ஏன் மக்களிடம் கானொளி மூலம் வாக்கு கேட்கலாமே? ஏன் பறந்து வருகிறார். மக்கள் சிந்திக்க வேண்டும். வளம், அமைதி, வளர்ச்சி என்று கூறி வருகிறார் ஜெயலலிதா. தமிழகத்தில் கரண்ட் இல்லை, 60 சதவீத தொழிற்சாலைகள் மூடப்பட்டு வேலைவாய்ப்பு இல்லை. இதுதான் வளமா. ஒரு நாளுக்கு 9 கொலைகள், ஆண்டிற்கு 6500 கொலை நடந்துள்ளது. இதுதான் அமைதியா? மதுக்கடைகள்தான் வளர்ச்சியடைந்துள்ளது. இதுதான் வளர்ச்சியா? மதுகடைகளின் வரும் பணத்தில் இலவசத்தை கொடுத்து வருகிறார். நாங்கள் தரமான கல்வி தருவோம், தரமான சுகாதாரம் தருவோம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
பாமக மாவட்டச் செயலாளர் வைத்தி, செந்தில்குமார், சிதம்பரம் நகரச் செயலாளர் முத்து.குமார், நகரத் தலைவர் பி.கே.அருள், தேமுதிக மாவட்டச் செயலாளர் சபா.சசிக்குமார், நகரச் செயலாளர் சி.க.விஜயகுமார், பாரதிய ஜனதா கட்சி மாவட்டத் தலைவர் சுகுமாறன், மாவட்ட பொருளாளர் வே.ராஜரத்தினம், நகரத் தலைவர் திருமாறன், புதிய நீதிகட்சி மாவட்டச் செயலாளர் உமாசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்று பேசுகின்றனர். நகரச் செயலாளர் முத்து.குமார் நன்றி கூறினார்.