மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் 80.15 % வாக்குப்பதிவு

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் 80.15 சத வாக்குகள் பதிவாகியுள்ளது. மொத்தமுள்ள 12 லட்சத்து 47 ஆயிரத்து 644 வாக்காளர்களில், 10 லட்சத்து 67 பேர் வாக்களித்துள்ளனர். கடந்த 2009 நாடாளுமன்ற தேர்கலை காட்டிலும் வாக்குப்பதிவு 4 சதவீதம் அதிகரித்துள்ளது.

Updated On :24 ஏப்ரல் 2014, 4:02 pm

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் 80.15 சத வாக்குகள் பதிவாகியுள்ளது. மொத்தமுள்ள 12 லட்சத்து 47 ஆயிரத்து 644 வாக்காளர்களில், 10 லட்சத்து 67 பேர் வாக்களித்துள்ளனர். கடந்த 2009 நாடாளுமன்ற தேர்கலை காட்டிலும் வாக்குப்பதிவு 4 சதவீதம் அதிகரித்துள்ளது.

 கடலூல் நாடாளுமன்ற தொகுதியில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடந்தது. இந்த தொகுதியில் அதிமுக சார்பில் எ.அருண்மொழிதேவன், திமுக சார்பில் கொ.நந்தகோபாலகிருஷ்ணன்,  தேமுதிக சார்பில் சி.ஆர். ஜெயசங்கர்,  காங்கிரஸ் சார்பில் கே.எஸ்.அழகிரி,  இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் கு.பாலசுப்பிரமணியன்,  உள்பட 17 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

 இந்த தொகுதியில் 12 லட்சத்து 47 ஆயிரத்து 644 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. கடலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 1,408 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது.  17 வேட்பாளர்கள் போட்டியிட்டதால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வீதம், 2,816 எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது.

 பல இடங்களில் காலை 7 மணிக்கே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். காலை 9 மணி நிலவரப்படி 15 சதவீதம், 11 மணிக்கு 36 சதவீதம், 1 மணிக்கு 48 சதவீதம், 3 மணிக்கு 65 சதவீதம், 5 மணிக்கு 72 சதவீதம் வாக்குகள், 6 மணி இறுதி நிலவரப்படி 80.15 சதவீதம் வாக்குகள் பதிவாகியது. 

 திட்டக்குடி சட்ட மன்ற தொகுதியில் 1 லட்சத்து 56 ஆயிரத்து 878, விருத்தாசலம் தொகுதியில் 1 லட்சத்து 72 ஆயிரத்து 341, நெய்வேலி தொகுதியில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 410, பண்ருட்டி தொகுதியில் 1 லட்சத்து 82 ஆயிரத்து 620, கடலூர் தொகுதியில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 941, குறிஞ்சிப்பாடி தொகுதியி்ல்1 லட்சத்து 79 ஆயிரத்து 577 வாக்குகள் என மொத்தம் 10 லட்சத்து 67 வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்கு சதவீதம் 80.15.

 இருப்பினும் முழுமையான இறுதி விவரம் வெள்ளிக்கிழமை தான் தெரியவரும் மாவட்ட தேர்தல் அதிகாரி ரா.கிர்லோஷ்குமார் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.