தீக்குளித்த பட்டதாரி பெண் சிகிச்சை பலனின்றி சாவு

கரூர் அருகேயுள்ள தாந்தோணிமலை வெள்ளைகவுண்டன்நகரை சேர்ந்தவர் காவ்யாஸ்ரீ (19). தாய், தந்தையை இழந்த இவர், உறவினர் வீட்டில் தங்கி திருச்சியில்
Updated on
1 min read

கரூர் அருகே தீக்குளித்த பட்டதாரி பெண் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை பரிதாபமாக இறந்தார்.

கரூர் அருகேயுள்ள தாந்தோணிமலை வெள்ளைகவுண்டன்நகரை சேர்ந்தவர் காவ்யாஸ்ரீ (19). தாய், தந்தையை இழந்த இவர், உறவினர் வீட்டில் தங்கி திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால், சனிக்கிழமை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

இதுகுறித்து புகாரின்பேரில் பசுபதிபாளையம் உதவி ஆய்வாளர் சுமதி வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com