எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சுற்றுலா வேன் கவிழ்ந்து சிறுவன் உள்ளிட்ட 6 பேர் காயம்

சுரண்டை, சிவகுருநாதபுரம், பாறையடி தெருவைச் சேர்ந்த சேர்மராஜ் மனைவி பத்மா (28) என்பவர், அங்குள்ள ஒரு கால் சென்டரில் வேலை செய்து வருகிறார். இவருடன் வேலை செய்யும் சிலர் திங்கள்கிழமை

Updated On :4 ஆகஸ்ட் 2014, 5:43 pm IST

திருநெல்வேலி மாவட்டம், சுரண்டையிலிருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வேன் ஸ்ரீவில்லிபுத்தூரில் கவிழந்ததில் அதில் பயணம் செய்த ஒரு சிறுவன் உள்ளிட்ட 6 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

சுரண்டை, சிவகுருநாதபுரம், பாறையடி தெருவைச் சேர்ந்த சேர்மராஜ் மனைவி பத்மா (28) என்பவர், அங்குள்ள ஒரு கால் சென்டரில் வேலை செய்து வருகிறார். இவருடன் வேலை செய்யும் சிலர் திங்கள்கிழமை கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதற்காக வேனில் புறப்பட்டு வந்துள்ளனர். வேனை தென்காசி, கடையால் உருட்டி, வடக்குத் தெருவைச் சேர்ந்த அ.சிவன்ராஜ் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

வேன் ராஜபாளையம்-ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, மடவார்வளாகம் கோட்டை கருப்பசாமி கோயில் அருகே நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மண் ரோட்டில் இறங்கி கவிழ்ந்துள்ளது.

இதில் வேனில் பயணம் செய்த பத்மா, ராமலட்சுமி (20), ஹரினாதேவி (22), ஜெயந்தி (20), அனிதா (21), ஸ்ரீமன் (7) ஆகியோர் பலத்த காயம் அடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக இவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இது தொடர்பாக பத்மா கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து வேன் டிரைவர் சிவன்ராஜைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.