தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

முதல்வர் அறிவிப்பு: சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி வெடி, வெடித்து கொண்டாட்டம்

கொள்ளிடம் ஆற்றில் கடலூர், நாகை மாவட்டங்களைச் சேர்ந்த ஆதனூர்-குமாரமங்கலம் இடையே ரூ.400 கோடி செலவில் கொள்ளிடம் ஆற்றின் வடிநீரை பாசனத்திற்கு, குடிநீருக்கும் திருப்பிவிடும் திட்டத்தை தமிழக

News image
Updated On :4 ஆகஸ்ட் 2014, 12:39 pm

ஜி.சுந்தரராஜன்

கொள்ளிடம் ஆற்றில் கடலூர், நாகை மாவட்டங்களைச் சேர்ந்த ஆதனூர்-குமாரமங்கலம் இடையே ரூ.400 கோடி செலவில் கொள்ளிடம் ஆற்றின் வடிநீரை பாசனத்திற்கு, குடிநீருக்கும் திருப்பிவிடும் திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை சட்டப்பேரவையில் அறிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கையினை ஏற்று அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து சிதம்பரத்தில் நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியினர் மேலவீதி, தெற்குவீதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் வெடி, வெடித்து கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கற்பனைச்செல்வம், மாவட்டக்குழு உறுப்பினர் வெங்கடேசன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் சுனில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டி, ஆற்று நீரை, கான்சாகிப்வாய்காலில் திருப்பி விட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் ஒன்றியச் செயலாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன் முன்னிலையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடந்த ஜீலை 2-ந் தேதி பொன்னந்திட்டு-சிதம்பரம் வரை 25 கி.மீ தூரம் நடைபயணம் மேற்கொண்டு சிதம்பரம் உதவிஆட்சியரிடம் மனு அளித்தனர். கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ, தமிழக முதல்வரிடமும் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.