தமிழ்நாட்டில் உள்ள 32 ரெவின்யூ மாவட்டங்களில், முஸ்லீக் லீக் கட்சியில் 42 மாவட்டங்களாக பிரித்து நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது 52 மாவட்டங்களாக பிரித்து நிர்வாகிகள் நியமிக்க முடிவு செய்துள்ளோம். அதுபோன்று 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், தொகுதி செயலாளர், துணைச் செயலாளர் நியமிக்கப்படுவார்கள். ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டம், கடலூர் வடக்கு மாவட்டம், கடலூர் தெற்கு மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்படும். அனைத்து சமுதாயத்தினரின் கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும். சென்னை கிரிக்கெட் கிளப்பில் வேட்டி அணிந்து சென்றவர்கள் வெளியேற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். தமிழக சட்டப்பேரவையில் வேட்டி அணிந்து செல்வதை தடுத்தால் ஒராண்டு சிறை அல்லது ரூ.25 ஆயிரம் அபராதம் என முதல்வர் சட்டத்தை இயற்றியுள்ளோர்.