ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாராக பணிபுரிந்து வந்தவர் மகேஸ்வரி. ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கோட்டத்தில் கஞ்சா தராளமாக புழக்கத்தில் இருப்பதாக மதுரை போதை தடுப்பு போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் பேரில் சனிக்கிழமை அதிகாலை ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிக்கு அவர்கள் வருவது வன்னியம்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மகேஸ்வரிக்கு தெரியவந்ததுள்ளது. இவர் இத்தகவலை உடனடியாக வைத்திலிங்காபுரத்தைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி மகாலிங்கம் என்பவரிடம் கூறியுள்ளார். அவர் உடனடியாக கஞ்சா மூட்டைகளுடன் தப்பி ஓடிவிட்டார். இது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரனின் உடனடி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து மகேஸ்வரியை உடனடியாக விருதுநகர் ஆயுதப்படையில் வந்து பணியில் சேர அவர் உத்தரவிட்டார். கடந்த பிப்ரவரி மாதம், இப் பகுதியில் உள்ள நூற்பு ஆலையில் ஒரு பிரச்னையில் ஒரு தரப்பிற்கு ஆதரவாக செயல்பட்டதாக இவர் வன்னியம்பட்டி காவல் நிலையத்திலிருந்து ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.