கடலூரில் மறியலில் ஈடுபட முயன்ற சத்துணவு ஊழியர்கள் 200 பேர் கைது
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி கூட்டமைப்பு சார்பில் திங்கள்கிழமை மாநிலம் முழுவதும் மறியல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை முன்னிட்டு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலி


கடலூரில் மறியலில் ஈடுபட முயன்ற சத்துணவு ஊழியர்கள் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி கூட்டமைப்பு சார்பில் திங்கள்கிழமை மாநிலம் முழுவதும் மறியல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை முன்னிட்டு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. பின்னர் அவர்கள் மறியலுக்கு முயன்றபோது, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக சுமார் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்திற்கு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சி.மச்சேந்திரன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் சி.ராமநாதன், மாவட்டச் செயலாளர் எஸ்.ரெங்கசாமி, மாவட்டத் தலைவர் எம்.கணேசன், கே.விஜயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். போராட்டத்தை வாழ்த்தி அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் என்.காசிநாதன், கல்யாணசுந்தரம், அணைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.மனோகரன் உள்ளிட்டோர் பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...