தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

அண்ணாமலைப் பல்கலையில் திருநங்கைகளுக்கான மனித உரிமைகள் குறித்த பயிற்சி வகுப்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கக அரசியல் அறிவியல் துறை மற்றும் பொது நிர்வாகப்பிரிவு சார்பில் திருநங்கைகளுக்கான மனித உரிமைகள் என்ற தலைப்பிலான ஒருநாள் பயிற்சி

News image
Updated On :12 ஆகஸ்ட் 2014, 12:03 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கக அரசியல் அறிவியல் துறை மற்றும் பொது நிர்வாகப்பிரிவு சார்பில் திருநங்கைகளுக்கான மனித உரிமைகள் என்ற தலைப்பிலான ஒருநாள் பயிற்சி வகுப்பு பல்கலைக்கழக நூலக அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தொலைதூரக்கல்வி மைய இயக்குநர் முனைவர் ஆர்.எம்.சந்திரசேகரன் தலைமை வகித்துப் பேசுகையில் மனிதர்களை, மனிதர்களாக நடத்தும் மாண்பு பற்றி எடுத்துரைத்தார். கலைப்புல முதல்வர் முனைவர் ஆர்.ராஜேந்திரன் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து உரையாற்றினார். அவர் பேசுகையில் திருநங்கைகளின் உரிமைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றியும் தெரிவித்தார். தேசிய மனித உரிமைகள் பயிற்சி பிரிவு மூத்த அதிகாரி எஸ்.கே.ஜெயின் சிறப்புரையாற்றினார்.

பயிற்சி வகுப்பில் சர்வதேச மனித இரிமைகள் பிரகடனங்கள் மற்றும் ஒப்பந்தங்கள், இந்திய அரசியலமைப்பு சட்ட ரீதியான மனித உரிமை ஷரத்துக்கள், மனித உரிமை பாதுகாப்பு சட்டம் 1993, தேசிய மனித உரிமை ஆணையம், மாநில மனித உரிமை ஆணையங்கள் மற்றும் அதன் பணிகள், ஐ.நா-வின் 1979 ஆண்டு பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளை களைவதற்கான ஒப்பந்த், குழந்தைகள், பெண்கள், உரிமைகள், திருநங்கைகளின் உரிமைகள், அவர்களது சமூக பொருளாதார நிலை, திருநங்கைகளின் உளவியல் நலம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பினால் ஏற்பட்டுள்ள சாதக, பாதகங்கள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.

பயிற்சியில் புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் பொன் லாசரஸ் சாம்ராஜ், இந்திய மனித உரிமைகள் ஆணையம் முனைவர் எஸ்.கே.ஜெயின், அண்ணாமலைப் பல்கலை. பேராசிரியர் பி.சக்திவேல், கடலூர் கலைக்கல்லூரி முதல்வர் வி.என்.விஸ்வநாதன் ஆகியோர் பயிற்சி வல்லுநர்களாக இருந்து கருத்துரையாற்றினர். திருநங்கைகள் செயல் திறனாளிகள் கல்கி சுப்பிரமணியன், பிரியாபாபு, ஆல்கா, சுதா, பாரதி கண்ணம்மா, சீத்தல், குணவதி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்றனர். பயிற்சி வகுப்பிற்கான ஏற்பாடுகளை அரசியல் அறிவியல் துறை பேராசிரியர்கள் முனைவர் சி.சுப்பிரமணியன், பேராசிரியை எம்.சுகிர்தா ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.