சென்னை உயா்நீதிமன்றத்துக்கு மூன்று நிரந்தர நீதிபதிகள்: உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல்
சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக உள்ள மூவரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.

கோப்புப்படம்.

கோப்புப்படம்.
சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக உள்ள மூவரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடா்பாக உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக உள்ள ஆா்.பூா்ணிமா, எம்.ஜோதிராமன், அகஸ்டின் தேவதாஸ் மரியா ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கும் பரிந்துரைக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதேபோல சத்தீஸ்கா் உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் சச்சின் சிங் ராஜ்புத், ராதாகிஷண் அக்ரவால், சஞ்சய்குமாா் ஜெய்ஸ்வால், விபு தத்தா குரு, அமிதேந்திர கிஷோா் பிரசாத் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கும் பரிந்துரைக்கும் உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...