எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மனைவியை அடித்து துன்புறுத்திய ஆசிரியப் பயிற்றுநர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியை நகையைக் கேட்டு அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு விரட்டியதாக அவரது கணவரான வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைத்

Updated On :17 ஆகஸ்ட் 2014, 5:31 pm IST

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியை நகையைக் கேட்டு அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு விரட்டியதாக அவரது கணவரான வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில், போக்குவரத்து நகரைச் சேர்ந்தவர் கலைச்செல்வி (28). இவருக்கும் சேசபுரம், ஆர்.சி.தெருவைச் சேர்ந்த அந்தோனி மகன் ராஜா (எ) மரியலூர்து என்பவருக்கும் ஒன்னரை ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. ராஜா (எ) மரியலூர்த்து, திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் உள்ள வட்டார வளமையத்தில் ஆசிரியப் பயிற்றுநராக வேலை செய்து வருகிறார். திருமணத்தின்போது 33 பவுன் நகை வரதட்சிணையாக கொடுக்கப்பட்டுள்ளது. சேசபுரத்தில் இவர்கள் குடியிருந்துள்ளார்கள். கலைச்செல்வி தனது நகைகளை வங்கியில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருந்துள்ளார். ராஜா (எ) மரியலூர்த்து, நகைகளை எடுத்துத்தர வலியுறுத்தி தகராறு செய்து வந்துள்ளார். இறுதியாக நகைகையைக் கேட்டு மனைவியை அடித்து துன்புறுத்தி வீட்டைவிட்டு விரட்டிவிட்டாராம்.

இது குறித்து கலைச்செல்வி, ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள ராஜா (எ) மரியலூர்துவை தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.