தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ஆசிரியர்கள் இடமாற்றம்: சிதம்பரத்தில் அரசு பள்ளியை முற்றுகையிட்ட மாணவர்கள்

சிதம்பரத்தில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த சில மாதங்களாக மேல்நிலை வகுப்புக்கு பாடம் எடுக்கும் நான்கு ஆசிரியர் பணி

News image
Updated On :28 ஆகஸ்ட் 2014, 2:18 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அரசு  நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இரு ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து பள்ளி மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.

சிதம்பரத்தில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த சில மாதங்களாக மேல்நிலை வகுப்புக்கு பாடம் எடுக்கும் நான்கு ஆசிரியர் பணி இடம் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. மேலும் கடந்த இருதினங்களுக்கு முன்பு கலந்தாய்வு மூலம் மேலும் இரு ஆசிரியர்களை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனை அறிந்த மாணவர்கள் ஏற்கனவே நான்கு ஆசிரியர்கள் இல்லாமல் படிக்கமுடியாமல் அவதி அடைந்து வருகிறோம். மேலும் இரு ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதை ஏற்க முடியாது. எனவே அவர்களுக்கு பதில் வேறு ஆசிரியர்களை நியமனம் செய்து விட்டு பணி மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து அனைத்து மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி நுழைவுவாயில் முன்பு இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் சுனில்குமார் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் மற்றும் போலீஸார் பள்ளிக்கு சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மாணவர்களின் கோரிக்கை ஒரு வாரத்தில் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.