6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாளையங்கோட்டையில் விபத்து: கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி தொழிலாளி சாவு

பாளையங்கோட்டை தியாகராஜநகர் 4 ஆவது நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராகவேந்திரன். தனியார் வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இப்போது சென்னையில் வசித்து வரும் இவர், தியாகராஜநகரில்

News image
Updated On :28 ஆகஸ்ட் 2014, 2:17 pm

முத்துகுமார்

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட பாளையங்கோட்டை தியாகராஜநகரில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி கட்டுமான தொழிலாளி வியாழக்கிழமை இறந்தார்.

பாளையங்கோட்டை தியாகராஜநகர் 4 ஆவது நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராகவேந்திரன். தனியார் வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இப்போது சென்னையில் வசித்து வரும் இவர், தியாகராஜநகரில் உள்ள தனது பழைய வீட்டை இடித்துவிட்டு புதிதாக கட்ட முடிவு செய்தாராம். அதன்படி ஒப்பந்தம் விடப்பட்டிருந்தது. இதையடுத்து முதல்கட்டமாக வீட்டினை இடிக்கும் பணி நடைபெற்று வந்தது.

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள அனந்தநம்பிக்குறிச்சி மேலத்தெருவைச் சேர்ந்த பலவேசமுத்து மகன் முத்துமாலை (60), அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோர் பழைய கட்டடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். வியாழக்கிழமை மாலையில் சிமென்ட் சிலாப் ஒன்றை இடிக்கும்போது அது சரிந்து முத்துமாலை மீது விழுந்ததாம். இதில் பலத்த காயமடைந்த அவர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கினார்.

தகவலறிந்ததும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் வெட்டும்பெருமாள் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கட்டட இடிபாடுகளை அப்புறப்படுத்தினர். ஆனால், முத்துமாலை சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது. இதையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

உயிரிழந்த முத்துமாலைக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.