செப்டம்பர் 4 ஆம் தேதி அதிகாலையில் அருள்மிகு ஆறுமுகர் உருகுசட்டம் நடைபெறுகிறது. அதன்பின்பு சண்முகவிலாசம் கட்டளை, தண்டியல்பல்லக்கு சேவை, வெற்றிவேர் சப்பரத்தில் ஆறுமுகப்பெருமான் எழுந்தருளலும், சிறப்பு நீராட்டு வழிபாடும் நடைபெறுகின்றன. அன்று இரவு தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தி திருநெல்வேலி மாநகருக்கு சுப்பிரமணியர் எழுந்தருள்கிறார்.செப்டம்பர் 5 ஆம் தேதி காலையில் வெள்ளைசாத்தி நான்முகன் காட்சியும், இரவில் பச்சை சாத்தி திருமால் காட்சியும், ஆறுமுகர் சேர்க்கையும் நடைபெறுகின்றன. 6 ஆம் தேதி காலையில் தண்டியல் பல்லக்கில் சுவாமி அருள்பாலிப்பார்.