மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகள் நிரம்பி வருகின்றன. 156 அடி கொள்ளளவை கொண்ட சேர்வலாறு அணை நிரம்பிய நிலையில் உபரிநீர் தாமிரவருணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. 143 அடி கொள்ளளவை கொண்ட பாபநாசம் அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை 14, பாபநாசம் கீழ் அணை 3, சேர்வலாறு அணை 11, மணிமுத்தாறு அணை 3.2, கருப்பாநதி அணை 1, குண்டாறு அணை 1.1, அடவிநயினார் அணை 1, திருநெல்வேலி 0.04, பாளையங்கோட்டை 4, களக்காடு 5.8, அம்பாசமுத்திரம் 3.2, கன்னடியன் அணைக்கட்டு 3, நான்குனேரி 1.5, ராதாபுரம் 1, செங்கோட்டை 1, தென்காசி 1.2, ஆலங்குளம் 4. திங்கள்கிழமையும் இம்மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் உள்பட பரவலாக மிதமான மழை பெய்தது.