இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வல்லூர் அனல் மின் நிலையம் முன் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

வல்லூர் அனல் மின் நிலையத்தில் வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி  திங்கள்கிழமை வேலைக்கு செல்லாமல்

News image
Updated On :22 டிசம்பர் 2014, 10:36 am

ம.சுந்​த​ர​மூ​ர்த்தி

வல்லூர் அனல் மின் நிலையத்தில் வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி  திங்கள்கிழமை வேலைக்கு செல்லாமல் தொழிலாளர்கள்  ஆர்பாட்டம் செய்தனர். பொன்னேரி வட்டம் வல்லூரில் அமைந்துள்ள அனல் மின் நிலையத்தில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். இதில் தகுதியுடைய நபர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் கழிப்படம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தொழிலாளர்களுக்கு  ஏற்படுத்தி தரக்கோரி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய கூட்டமைப்பின் தலைவர் விஜயன் தலைமையில் அனல் மின் நிலையம் முன்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.