புதுப்பட குறுந்தகடுகளை திருட்டுத் தனமாக தயாரித்தாக அருப்புக்கோட்டை தனியார் திரையரங்கத்தின் ஆபரேட்டாரை போலீஸார் வியாழக்கிழமை இரவு குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.
மதுரை பெத்தானியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ்(56). இவர் அருப்புக்கோட்டை தனியார் திரையரங்கத்தில் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அப்பகுதி தனியார் திரையரங்கில் திரையிடப்பட்ட பூஜை படத்தை கணிப்பொறியில் பதிவு செய்து குறுந்தகடுகள் தயாரித்து வருவதாக திருட்டு வி.சி.டி ஒழிப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் நாகராஜன் தலைமையில் போலீஸார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர். அதோடு, அவரிடம் இருந்த புதுப்பட குறுந்தகடுகளையும் பறிமுதல் செய்தனர்.
ஏற்கனவே இதுபோல் திரைக்கு வரும் புதிய படங்களை பதிவு செய்ததாக 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதனால் நாகராஜ் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆட்சியருக்கு பரிந்துரைத்தார். அதையடுத்து, ஆட்சியர் டி.என்.ஹரிஹரனும் வழக்குகளை ஆய்வு செய்து உடனே கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் திரையங்கு ஆபரேட்டர் நாகராஜை போலீஸார் கைது செய்து மதுரை மத்தியச் சிறைச்சாலையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்பாடு 13% வீழ்ச்சி!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு!
தமிழகம் வரும் ராகுல்! 3 மாவட்டங்களில் இன்று பிரசாரம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

