தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

பொறையாரில் அரசு போக்குவரத்து கழக பணிமனையை முற்றுகையிட சென்ற தொழிலாளர்கள் 60 பேர் கைது

நாகை மாவட்டம் பொறையாரில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையை முற்றுகையிட ஊர்வலமாக சென்ற தொழிலாளர்கள் 60 பேரை செவ்வாய்க்கிழமை காவல்துறையினர்

Updated On :30 டிசம்பர் 2014, 8:51 am

நாகை மாவட்டம் பொறையாரில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையை முற்றுகையிட ஊர்வலமாக சென்ற தொழிலாளர்கள் 60 பேரை செவ்வாய்க்கிழமை காவல்துறையினர் கைது செய்தனர்.

தமிழகம் முழுவதும் போக்குவரத்து துறை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் பொறையாறு கிளையில் பணிபுரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 11 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஓட்டுனர்கள்,நடத்துனர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் பொறையாறு குமரன் கோயில் பகுதியிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு போக்குவரத்து கழக பணிமனையை நோக்கி முற்றுகையிட சென்றனர்.பழைய பேருந்து நிலையம் அருகே ஊர்வலம் வந்தபோது நாகை நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பி துரைராஜ்,பொறையாறு காவல் ஆய்வாளர் மணிமாறன் உள்ளிட்ட காவல்துறையினர் ஊர்வலத்தை தடுத்து நிறுத்தி அதில் கலந்து கொண்ட 60 பேரை கைது செய்தனர்.

முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை செம்பனார்கோயில் தெற்கு ஒன்றிய திமுக செயலர் நிவேதா முருகன்,பேரூர் அவைத்தலைவர் கந்தசாமி  உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். போராட்டத்தின் காரணமாக அரசு போக்குவரத்து கழக பணிமனையில் காலை முதலே ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதனிடையே பொறையாறு கிளையிலிருந்து 30 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் செவ்வாய்க்கிழமை குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகளே இயக்கப்பட்டன.இதனால பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாயினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.