அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சேலம் அருகே ரூ.40 லட்சம் நில மோசடி: இருவர் கைது

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே ஆசிரியைக்கு சொந்தமான ரூ.40 லட்சம் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்ததாக விவசாயிகள் இருவர் சனிக்கிழமை கைது

News image
Updated On :1 பிப்ரவரி 2014, 2:24 pm

தங்கராஜா

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே ஆசிரியைக்கு சொந்தமான ரூ.40 லட்சம் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்ததாக விவசாயிகள் இருவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

சேலம் பட்டை கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ஆசிரியை விஜயா. தனது குடும்பத்துக்கு சொந்தமான ரூ.40 லட்சம் மதிப்புள்ள 10 சென்ட் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாகக் கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேலிடம் அண்மையில் இவர் புகார் அளித்திருந்தார்.

 இது குறித்து நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி. முனியப்பன், ஆய்வாளர் சண்முகய்யா ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அதில், விஜயாவுக்கும் அவரது சகோதரிகளுக்கும் கடந்த 1982-ல், அவரது தாய் வழித் தாத்தா சின்ன இருசான் 10 சென்ட் நிலத்துக்கு அதிகார பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார்.

 இதற்காக பணம் செலுத்தப்பட்டிருந்தும், 5 ஆண்டு கிரய ஒப்பந்த காலம் முடிவடைந்தும் சின்ன இருசான் கிரயம் செய்து கொடுக்கவில்லையாம். இதை எதிர்த்து விஜயா, அவரது சகோதரிகள் சங்ககிரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் விஜயா தரப்புக்கு சாதகமாக கடந்த 2006-ல் தீர்ப்பளிக்கப்பட்டது.

 இந்த நிலையில் சின்ன இருசானின் உடன் பிறந்த சகோதரியின் வாரிசுகளான பெரியசாமி, சின்னசாமி உள்ளிட்டோர், அந்த சொத்தில் தங்களுக்கும் பங்கு இருப்பதாகக் கூறி வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

 இதற்கிடையே ராவணன் என்பவர் மேற்படி பெரியசாமி, சின்னசாமி தரப்பினருக்கு உரிமை இல்லாத நிலத்துக்கு உரிமை இருப்பதாகக் காட்டி, போலியான ஆவணங்களைத் தயாரித்து கிரயம் பெற்றுள்ளார். இதையடுத்து அனைவரும் விஜயா தரப்பினரின் அனுபவத்தில் இருந்த நிலத்துக்குள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அத்துமீறி நுழைந்து அபகரித்துக் கொண்டனர்.

 இதையடுத்து விஜயாவின் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்ததற்காக பெரியசாமி (65), சின்னசாமி (45) இருவரும் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய ராவணன் உள்ளிட்ட மேலும் 4 பேர்களை போலீஸார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரும் சகோதரர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.