லால்குடி அருகே பேருந்து கவிழ்ந்து 20 பேர் காயம்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நகரப் பேருந்து ஒன்று வயலுக்குள் கவிழ்ந்ததில் 20 பேர் காயம் அடைந்தனர். லால்குடியில் இருந்து சத்திரம் பேருந்து நிலையத்தை நோக்கிச் சென்ற நகரப் பேருந்து, மேல வாளாடி அருகே


திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நகரப் பேருந்து ஒன்று வயலுக்குள் கவிழ்ந்ததில் 20 பேர் காயம் அடைந்தனர்.
லால்குடியில் இருந்து சத்திரம் பேருந்து நிலையத்தை நோக்கிச் சென்ற நகரப் பேருந்து, மேல வாளாடி அருகே வந்த போது, எதிரே வந்த லாரியில் மோதாமல் இருப்பதைத் தவிர்க்க ஓட்டுநர் திருப்பியபோது, கட்டுப்பாட்டை இழந்து வயல்வெளியில் கவிழ்ந்தது. இதில், பேருந்தில் பயணித்த 20 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...